Monday, October 19, 2009

இயேசு கைவிடார்

இயேசு கிறிஸ்து நோய்களை நீக்கி சுகம் தருகிறார்

"என்னால் செய்ய கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?"

"தேவனாலே எல்லாம் கூடும்" 
இயேசு கிறிஸ்து உண்மையாய் தம்மை நோக்கி அழைக்கிற யாவருக்கும் மிக அருகில் இருக்கிறார். உங்களை இந்த உலகத்தில் இருக்கும் எல்லோரும் கை விட்டிருக்கலாம். உங்கள் வியாதி சுகமாகாது என்று சொல்லி மருத்துவர்கள் கை விரித்திருக்கலாம். நீங்கள் கலங்கி தவிக்க வேண்டாம். எந்த வியாதியையும் ஒரு நொடியில் சுகமாக்கி அற்புதங்களை செய்த இயேசு உங்கள் நடுவில் இருக்கிறார். ஏசுவால் செய்ய முடியாத அதிசயம் ஒன்றுமில்லை. பிறவி குருடனின் கண்களை இயேசு திறந்திருக்கிறார், சப்பாணியை நடக்க செய்திருக்கிறார், செவிடர் கேட்க செய்திருக்கிறார், குஷ்ட ரோகிகளை சுகமாக்கி இருக்கிறார், கூன் முதுகை நிமிர்த்தி இருக்கிறார், முப்பத்திஎட்டு வருஷம் படுக்கையில் இருந்தவனை எழுப்பி நடமாட செய்திருக்கிறார், இறந்தவர்களை உயிரோடு எழுப்பி இருக்கிறார். இயேசு அந்நிய தெய்வம் அல்ல. நீங்கள் எப்படி உங்கள் நண்பரோடு பேசுவீர்களோ, அது போல உண்மையாக ஏசுவிடம் பேசலாம். உங்கள் குற்றங்கள், குறைவுகளை ஏசுவிடம் அறிக்கை செய்யுங்கள். டாக்டர்கள் கைவிட்ட கான்சர் நோயாளிகள் கூட ஏசுவால் சுகம் பெற்று சாட்சியாக வாழ்ந்து வருகிறார்கள். உங்களை சுகமாக்குவார் என்ற நம்பிக்கையோடு உங்கள் நோய் குணமாக கீழ்க்கண்ட ஜெபத்தை ஜெபியுங்கள்:
வானமும் பூமியும் கொள்ளாத அளவு என் மீது அன்பு கூருகிற என் ஏசுவே,
கல்வாரி சிலுவையில், நீர் என் பாவங்களையும், நோய்களையும் சுமந்து தீர்த்துவிட்டீர் என்று நான் நம்புகிறேன். கிருபையாக என் பாவங்களை எல்லாம் எனக்கு மன்னித்து , உம்முடைய பரிசுத்த ரத்தத்தினால் என்னை கழுவும்,   உம் தழும்புகளால் என்னை சுகமாக்கும், உம் ஆணி அறையப்பட்ட கரங்களை என் மேல் வைத்து என் நோயிலிருந்து என்னை விடுதலை செய்து சுகம் கொடுத்து விட்டதற்காக உமக்கு கோடானு கோடி நன்றி. என்னை  உம்முடைய பிள்ளையாக ஏற்று கொள்ளும். என்னோடு கூட இருந்து, இனி நான் பாவம் செய்யாமல் உம்மை பின்பற்றி வாழ உதவி செய்யும். ஆமென். 


கீழ்க்கண்ட பாடலை கிளிக் செய்து கேளுங்கள், சேர்ந்து பாடுங்கள், சுகம் பெற்று கொள்ளுங்கள்.